தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’பயங்கரவாதம், காலநிலை மாற்றம் பிரச்னைகளுக்கு இந்தியா மட்டுமே தீர்வு காண முடியும்’

ஜார்க்கண்ட்: உலகெங்கிலும் உள்ள தீவிரவாதம், காலநிலை மாற்றத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முழுமையான சிந்தனை, அனுபவத்தைப் பெற்ற ஒரே நாடு இந்தியா என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 20, 2020, 5:07 PM IST

RSS chief
RSS chief

ராஞ்சியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தீவிரவாதம், காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் உலகெங்கிலும் அமைதியைக் குலைக்கின்றன.

இத்தகைய பிரச்னைகள் உலகம் முழுவதும் அடிப்படை பிரச்னைகளாகும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் அனுபவம் இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது. ஏனெனில், அதற்கான முழுமையான சிந்தனையும், அனுபவமும் கொண்ட நாடு இதுவாகும்” என்றார்.

இதையும் படிங்க:காலநிலை மாற்றம் விடுக்கும் எச்சரிக்கை மணிகள்!

ABOUT THE AUTHOR

...view details