இந்தியாவில் கோவிட்-19 நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கோவிட்-19 தொடர்பாக சரியான தகவல்களையும், சுகாதார சேவைகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்க ஆரோக்கிய சேது என்ற செயலி ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தச் செயலியை ஆப் ஸ்டோர் (ஆப்பிள் போன்களுக்கு) அல்லது கூகுள் பிளே ஸ்டோர் (அண்டிராய்டு போன்களுக்கு) Mpfa தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.