தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2020, 10:15 AM IST

ETV Bharat / bharat

மணல் ஓவியம் மூலம் சுஷாந்த் சிங்கிற்கு மரியாதை!

மும்பை: மணல் ஓவியக் கலைஞர் ஒருவர், ஓவியம் மூலம் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

puri-sand-artist-pays-tribute-to-sushant-singh-rajput-with-prolific-art
puri-sand-artist-pays-tribute-to-sushant-singh-rajput-with-prolific-art

சின்னத்திரையிலிருந்து, அபிஷேக் கபூரின் கை போ சே என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு அடியெடுத்துவைத்து பல வெற்றிப்படங்களை அளித்த 34 வயது பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், நேற்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியாக நடித்து இந்தியா முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த இவருக்கு, பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த மணல் சிற்ப ஓவியரான மானஸ் குமார் சாகோ, சுஷாந்த் சிங்கிற்கு இரங்கல் தெரிவித்து மணல் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்.

கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான சீச்சோர் திரைப்படத்தில் சுஷாந்த் நடித்த கதாபாத்திரத்தின் ஓவியத்தை வரைந்த அவர், நீங்கள் எப்போதும் எங்களுடன் வாழ்ந்துவருகின்றீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங்கிற்கு மரியாதை செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஓவியத்தில் பூவையும், மெழுகுவர்த்திகளையும் வரைந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details