மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் செய்து, சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகபட்ச அபராதத் தொகையை விதித்திருக்கிறது. இதைக் கண்டித்து அகில இந்திய அளவில் இன்று நடந்த லாரிகள் வேலை நிறுத்தத்தில், புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கெடுத்தனர்.
குறிப்பாக இந்த சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஒருநாள் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தப்பட்டது.