தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 6, 2020, 9:27 PM IST

ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஒரே நாளில் 195 பேருக்கு கரோனா உறுதி

புதுச்சேரி : கரோனாவுக்கு ஒரே நாளில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், புதிதாக 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

puduchery Latest Corona Update
puduchery Latest Corona Update

புதுச்சேரியில் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் இருவர், ஜிப்மரில் ஒருவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இருவர் என மொத்தம் ஐந்து பேர் இன்று (ஆகஸ்ட் 6) ஒரே நாளில் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று புதிதாக 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 621ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 1,743 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இரண்டாயிரத்து 808 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details