புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தற்போது மிக வேகமாக அதிகரித்துவரும் நிலையில், மாநிலத்தின் அனைத்து எல்லைகளையும் மூட மாநில முதலமைச்சர் நாராயணசாமி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மருத்துவம், அத்தியாவசிய பொருள்களைக் கொண்டுவரும் வாகனங்கள் மட்டுமே புதுச்சேரி, காரைக்காலுக்குள் அனுமதிக்கப்படும் எனவும், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இ-பாஸ் கொண்டுவருபவர்களும் புதுச்சேரி மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.