தமிழ்நாடு

tamil nadu

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி இளைஞர்கள் போராட்டம்!

By

Published : Jan 30, 2020, 3:49 PM IST

புதுச்சேரி: வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவ்வழியே சென்ற முதலமைச்சர் நாராயணசாமி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி செய்திகள்
புதுச்சேரியில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி இளைஞர்கள் போராட்டம்

புதுச்சேரியில், அரசு துறைகளிலுள்ள காலி பணியிடங்களை நிரப்ப, அரசு தேர்வுகள் நடத்தக்கோரி அம்மாநில பட்டதாரி இளைஞர்கள் அமைதி ஊர்வலம் மேற்கொண்டனர்.

இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சுதேசி மில் அருகிலிருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் வந்தடைந்தனர். அப்படியே, அங்கிருந்து சட்டசபைக்கு சென்று முதலமைச்சர் நாராயணசாமியிடம் மனு கொடுப்பதாக இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் நாராயணசாமி, சட்டசபைக்குக் காரில் செல்லும் வழியில் தலைமைத் தபால் நிலையம் முன்பு கூடியிருந்த பட்டதாரி இளைஞர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசுத் துறை காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவில்லை எனவும், விரைவில் அம்மாநில காவல் துறையிலுள்ள 400 பணியிடங்களை நிரப்பக்கோரியும் முதலமைச்சரிடம் இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததைத் தொடர்ந்து பட்டதாரி இளைஞர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: நித்யானந்தா' பேக்கரி நடத்திய தீவிர பக்தர்: காரில் கடத்தப்பட்டு படுகொலை

ABOUT THE AUTHOR

...view details