தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 12, 2020, 9:00 PM IST

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மக்கள் கவனக் குறைவாக இருக்கக்கூடாது - அமைச்சர் வேண்டுகோள்!

பாண்டிச்சேரி: மாவட்டத்தில் பாதிப்பு குறைவாக இருப்பதாக எண்ணி மக்கள் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Puducherry people aware about corona -Minister request
Puducherry people aware about corona -Minister request

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இன்று கரோனா விவரம் குறித்து வீடியோ பதிவுச் செய்து வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரியில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு, எட்டாம் நாள் மீண்டும் சோதனை செய்யப்படுகிறது.

ஒன்பதாம் நாள் சோதனை முடிவுகளில், கரோனா தொற்று இல்லை என்றால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். இதுவரை 4,486 பேருக்கு கரோனா நோய் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில், 4,416 பேருக்கு நோய் தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. இன்னும் 53 பேருக்கு முடிவுகள் வரவில்லை.

சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்ச் சந்திப்பு

முதலமைச்சர் நாராயணசாமி, நான் அலுவலர்கள் பிரதமரிடம் காணொலியில் பங்கேற்றபோது முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரிக்கு என்னென்ன தேவைகள் இன்னும் உள்ளன. இன்னும் என்ன பாக்கியுள்ளது என்பது குறித்து பேசினார். மே 17ஆம் தேதிக்குப் பிறகு எந்த மாதிரியான தளர்வுகள் தேவை உள்ளது.

மக்கள் தேவைகள் என்ன என்பது குறித்து, விரிவாக முதலமைச்சர் பிரதமரிடம் எடுத்துரைத்தார். இதுகுறித்து, நேற்று இரவே எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள், இதுவரை அளித்துவந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

புதுவையில் பாதிப்பு குறைவாக இருப்பதாக எண்ணி மக்கள் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...கரோனா: அதிக பாதிப்புக்குள்ளான ஐந்து மாநிலங்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details