பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக புதுச்சேரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில், காமராஜர் சிலை அருகே அக்கட்சித் தலைவர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் - மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு
புதுச்சேரி : மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
![ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:37:10:1604164030-tn-pud-04-kannan-makkal-congress-arpattam-31102020214634-3110f-1604160994-598.jpg)
ஆர்ப்பாட்டம்
ராஜா சிக்னல் அருகே நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்தில், மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்காததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அக்கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்முழக்கங்கள் எழுப்பினர்.