நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில், புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ”நேற்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 590 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், புதுச்சேரி மாநிலத்தில் 27 பேருக்கும், காரைக்கால் பகுதியில் மூன்று பேருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.