புதுச்சேரி லாசுப்பேட்டை உயர் கல்வித்துறை அலுவலகத்தில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயர்கல்விதுறை செயலர் அன்பரசு, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் கல்வித்துறை செயலர் அன்பரசு பேசுகையில், “ கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு குறித்து பல்கலை மானியக் குழு பரிந்துரைத்தன்பேரில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் வாரம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும்.