புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் புதுச்சேரி அரசின் 2020ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமசிவாயம் ஆகியோர் வெளியிட தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் பெற்றுக்கொண்டார். இதில் 18,19ஆம் நூற்றாண்டை பிரதிபலிக்கும் வகையில் புதுச்சேரியின் பாரம்பரிய கட்டடங்களும் இடம்பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "பாரம்பரியத்தை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இந்தாண்டின் நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் நமது பாரம்பரிய கட்டடங்கள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.