தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக முகக்கவசங்கள் வழங்கிய புதுச்சேரி முதலமைச்சர் - காது கேளாதோர் வாய் பேச முடியாத நபர்களுக்கான பிரத்யேக முகக்கவசங்கள்

புதுச்சேரி: திருச்சி மருத்துவர் தயாரித்த மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை முதலமைச்சர் நாராயணசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக முகக்கவசங்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக முகக்கவசங்கள்

By

Published : Jun 3, 2020, 8:32 PM IST

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், முகக்கவசங்கள் அணியவும் மக்களை அரசுகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.

மருத்துவர் முகமது ஹக்கீம், புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் பிற அரசு அலுவலர்கள்

இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் முகமது ஹக்கீம் என்பவர், கேட்கும் திறனற்றவர்களுக்கும், வாய் பேச முடியாதவர்களுக்கும் பிரத்யேக முகக்கவசங்களை வடிவமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தான் தயாரித்த முகக்கவசங்களை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்தித்து இன்று வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்குப் பிரத்யேக முகக்கவசங்களை அணிவித்த முதலமைச்சர் நாராயணசாமி

சுமார் 500 முகக்கவசங்களை அவர் வழங்கியதையடுத்து, நாராயணசாமி அவற்றைப் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வின்போது அம்மாநில சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி, சமூகநலத் துறை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க :தமிழ்நாட்டில் நான்காவது நாளாக ஆயிரத்தை தொட்ட கரோனா

ABOUT THE AUTHOR

...view details