நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், முகக்கவசங்கள் அணியவும் மக்களை அரசுகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் முகமது ஹக்கீம் என்பவர், கேட்கும் திறனற்றவர்களுக்கும், வாய் பேச முடியாதவர்களுக்கும் பிரத்யேக முகக்கவசங்களை வடிவமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தான் தயாரித்த முகக்கவசங்களை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்தித்து இன்று வழங்கினார்.