புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது, 'புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கரோனா சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு கரோனா இல்லை என உறுதிசெய்யப்பட்டது. அவர் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டார். திருபுவனை அருகே உள்ள குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இவர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்.
'மதுவுக்கும், பெட்ரோலுக்கும் கோவிட் வரி விதிக்க வாய்ப்பு' - மதுவுக்கும், பெட்ரோலுக்கும் கோவிட் வரி விதிக்கப்படும்!
புதுச்சேரி: மதுவுக்கும், பெட்ரோலுக்கும் கோவிட் வரி விதிப்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்தார்.
தற்போது, புதுச்சேரியில் 2 பேர் மட்டுமே கரோனா சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். திங்கள் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, கடைகள் காலை 6 மணியில் இருந்து 5 மணிவரை திறக்கப்படும். புதுச்சேரியிலிருந்து வெளிமாநிலம் செல்வதற்கும் வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நாளை புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மதுக்கடைகள் திறப்பது குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்படும். மதுவுக்கும், பெட்ரோலுக்கும் கோவிட் வரி விதிப்பது குறித்து நாளை அறிவிக்கப்படும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாடு அரசுக்கு களங்கம் ஏற்படவேண்டும் என்பதாகவே உள்ளது. சிபிஐ முதலறிக்கை தாக்கல் செய்திருக்கின்றார்கள் என்று துணைநிலை ஆளுநர் அறிக்கை கொடுத்துள்ளார். தன்னுடைய பதவிக்கு, தகுதிக்கு ஏற்ப வேலை செய்யாமல், அதிகாரிகளை நேரத்தை வீணாக்கி, நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றார். புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி துரோகம் செய்து வருகின்றார். புகார் கொடுத்த கிரண்பேடியை முதலில் சிபிஐ விசாரிக்க வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றார். இது அவரது பதவிக்கு அழகல்ல. அதிகாரிகளை மிரட்டுவதும் பொய் வழக்கு போடுவதும், சிபிஐ அதிகாரிகளை தொடர்புகொண்டு வழக்கு போட சொல்வதும் அவர் வேலையில்லை. அவர் செயல்பாடு குறித்து முழுமையான அறிக்கையை பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் இதற்கு முடிவு வரும் என்று எதிர்பார்க்கின்றேன்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ரயில் மோதி தொழிலாளர்கள் பலி - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!