இதுகுறித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் ஆறு பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் மாஹேவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் தற்போது மேற்கண்ட பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அரசின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், புதுவை மாநிலத்தில் மருத்துவ பணியாளர்கள் கடந்த சில நாள்களாக எட்டு லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மருத்துவர்கள், செவிலியர், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், காவல் துறை, வருவாய் துறை, மின்துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை, சமூகநலத் துறை பணியாளர்கள் கரோனா பரவாமல் இருக்க இரவு பகலாக பாடுபடுகின்றனர்.