புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் முறையாக விதிமுறைகளை கடைபிடித்தால் கரோனா தொற்றை தடுத்து நிறுத்த முடியும். விதிமுறைகளை மீறி செயல்பட் டகடைகளின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இதன் காரணமாக தகுந்த இடைவெளியை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவில் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் மக்கள் சிகிச்சை பெற விரும்புகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
கரோனா தொற்று நேரத்தில் மத்திய அரசு, புதுச்சேரிக்கு அளித்துள்ள நிதி பங்கு மிகவும் குறைவாக உள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் பேசியுள்ளேன்.
அவர்கள் செவிசாய்க்காமல் இருப்பது மிகுந்த வறுத்தத்தை அளிக்கிறது. மின்சாரத்துறையை தனியார் மயமாக்குவது என்பது புதுச்சேரி மாநிலத்திற்கு பொருந்தாது. புதுச்சேரி மாநிலம் சட்டப்பேரவை உள்ள மாநிலம்.