தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 23, 2020, 5:08 PM IST

ETV Bharat / bharat

அவசரமாக டெல்லி விரைந்தார் புதுச்சேரி முதலமைச்சர்!

புதுச்சேரி: கரோனா தொற்று அதிகமுள்ள நிலையில்,கோவிட் நிதி பெறுவது சம்பந்தமாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவசரப் பயணமாக டெல்லி விரைந்தார்.

narayanasamy
narayanasamy

புதுச்சேரி மாநிலம் கரோனா காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக கடந்த 2 மாதங்களில் புதுச்சேரியில், கரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

இதுவரை புதுச்சேரியில், 25 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 500 பேர் கரோனா காரணமாக இறந்துள்ளனர். ஆனால் இதுவரை மத்திய அரசு, புதுச்சேரி அரசு கோரிய
ஜிஎஸ்டி நிதி, கோவிட் நிதி போன்றவற்றை வழங்கவில்லை. மாறாக வெறும் 3 கோடி ரூபாய் அளவில்தான் கோவிட் நிதியாக, மத்திய அரசு வழங்கியுள்ளது.

புதுச்சேரி அரசு, மாநிலத்தில் இருக்கும் நிதியைக் கொண்டு, கோவிட் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளுக்குத் தேவைப்படும் உணவு வகைகள், ஆம்புலன்ஸ் வசதிகள் போன்றவற்றை செய்துவருகிறது. இருப்பினும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை அழைத்துக்கொண்டு அவசரப் பயணமாக டெல்லி விரைந்துள்ளார்.

அங்கு அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், மத்திய உள் துறைச் செயலர், நிதித் துறைச் செயலர் ஆகியோரைச் சந்தித்து புதுவைக்குத் தேவையான நிதி, மருத்துவ உபகரணங்களைக் கேட்பார் எனத் தெரிகிறது.

இதையடுத்து அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களையும், மேலிடப் பொறுப்பாளர்களையும் சந்தித்துவிட்டு புதுச்சேரி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details