தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 22, 2020, 1:50 PM IST

ETV Bharat / bharat

’மணக்குள விநாயகர் கரோனா விலக அருள்புரிவார்’ -  நாராயணசாமி

புதுச்சேரி: உலகம் முழுவதிலுமிருந்தும் கரோனா விலக மணக்குள விநாயகர் அருள்புரிவார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி
முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (ஆக. 22) தரிசனம்செய்தார். மணக்குள விநாயகரின் உற்சவமூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ள இடத்தில் வழிபாடுசெய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது:

கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு விதித்த தடையின் காரணமாக புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை இந்து அமைப்பினரும், பொதுமக்களும் ஏற்று எளிய முறையில் தற்போது விழாவைக் கொண்டாடிவருவது வரவேற்கத்தக்கது.

முதலமைச்சர் நாராயணசாமி பேசிய காணொலி

கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக இது அமையும். சக்திவாய்ந்த மணக்குள விநாயகர் உலகம் முழுவதிலுமிருந்தும் கரோனா விலக அருள்புரிவார். மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு இறைவனை வழிப்பட்டேன்.

தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்” என்றார்.

இதையும் படிங்க: அரசின் உத்தரவால் களையிழந்த விநாயகர் சதுர்த்தி - மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details