தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட பாப்ஸ்கோ ஊழியர்கள்! - papsco staff protest

புதுச்சேரி: நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக்கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

papsco staff protest

By

Published : Nov 14, 2019, 5:40 PM IST

புதுச்சேரி அரசு நிறவனமான பாப்ஸ்கோ நிறுவனத்திற்கு கீழ் அரசு பெட்ரோல் பங்க், ரேஷன் கடைகள், மதுபானக்கடைகள், காய்கறிக்கடைகள் இயங்கிவருகின்றன. இந்நிறுவனத்தில் சுமார் 900 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில், தினக்கூலி ஊழியர்களாக உள்ள 600 பேருக்கு அரசு கடந்த பத்து மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருந்துள்ளது.

அரசின் இந்தச் செயலைக் கண்டித்தும், தங்களக்கு ஊதியம் வழங்கக் கோரியும் பாப்ஸ்கோ ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த பட்ஜெட்டில் பாப்ஸ்கோ நிறுவனத்தை திறம்பட நடத்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம்

இருந்தபோதிலும், இன்று வரை பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஊழியர்கள் இன்று புதுச்சேரி கடற்கரை சாலையிலுள்ள தலைமைச் செயலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க. அழகிரி

ABOUT THE AUTHOR

...view details