புதுச்சேரியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனிடையே புதுச்சேரியில் உள்ள சில தனியார் மருந்தகங்களில் முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்த நிலையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை அதிக விலைக்கு விற்கக்கூடாது எனச் சுகாதாரத் துறை எச்சரிக்கைவிடுத்திருந்தது.
இருப்பினும் நிர்ணயித்த விலையைவிட சில மருந்தகங்களில் முகக்கவசங்கள் தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவந்தன.