தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 9, 2020, 2:11 AM IST

ETV Bharat / bharat

புதுச்சேரி ராஜ்நிவாஸில் கிருமிநாசினி தெளிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்நிவாஸ் அலுவலக பணியாளர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

Pudhucherry Governor House Cleaning
Pudhucherry Governor House Cleaning

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1151 ஆக உள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் 112 பேருக்கு கரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி ராஜ் நிவாஸ் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு நாள்களுக்கு ராஜ் நிவாஸ் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ராஜ்நிவாஸ் அலுவலர்கள், ஊழியர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, ஆளுநர் மாளிகையில் உள்ள அலுவலகத்தின் உட்புறம் வெளிப்புறம் முழுவதும் கிருமி நாசனி தெளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:புதுச்சேரி ஆளுநர் அலுவலகப் பணியாளருக்கு கரோனா தொற்று - அலுவலகம் மூடல்

ABOUT THE AUTHOR

...view details