புதுச்சேரி பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியர்கள் என்ற அடிப்படையில் 1120 பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்க்கப்பட்டனர். இவர்களைக் கொண்டு புதுச்சேரி கால்வாய்கள், பூங்கா தூய்மைப்படுத்தும் பணி, சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணியில் அரசு ஈடுபடுத்தியது. இதில் நாளொன்றுக்கு இவர்களுக்கு 200 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர் சங்கத்தினர் கடந்த 10 ஆண்டுகளாக பகுதிநேர ஊழியர்களாக பணிபுரிந்து வரும் தங்களை அரசு தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும், நிரந்தர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அச்சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் சட்டப்பேரவையை முற்றுகையிட 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.