கரோனா காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசு மூலம் மதிய உணவு வழங்க முடியவில்லை.
இதன் காரணமாக, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சமைத்த உணவுக்குப் பதிலாக உணவு தானியங்கள், சமைப்பதற்கு ஏற்படும் செலவுகளுக்கு முதல் தவணையாக அந்தந்த பள்ளிகளில் உணவு, பணம் அதற்காக வழங்கப்படும் எனப் புதுச்சேரி கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.