பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) 63ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் சாதனை படைத்த டிஆர்டிஓ தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ளதைக் கண்டு பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டிஆர்டிஓவின் 63ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் சாதனை படைத்த டிஆர்டிஓ தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ளதைக் கண்டு பெருமைப்படுகிறேன். இந்த 2021ஆம் ஆண்டிலும் வரும் காலங்களிலும் எண்ணற்றச் சாதனைகளைப் படைக்க வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.