தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆணுறை பயன்படுத்த வற்புறுத்திய பாலியல் தொழிலாளி கொலை - ஆணுறை பயன்படுத்த வற்புறுத்திய பாலியல் தொழிலாளி கொலை

பெங்களூரு: உடலுறவின்போது ஆணுறையை பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்திய பெண்ணை காவலாளி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலைசெய்துள்ளார்.

Crime in Bengaluru
Crime in Bengaluru

By

Published : Jan 25, 2020, 11:56 AM IST

கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் முகுந்த் என்பவர் காவலாளியாக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பேருந்து நிலையம் ஒன்றில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரை முகுந்த் பார்த்துள்ளார். பின்னர் அவரை உடலுறவுக்கு அழைத்து, பாலியல் தொழிலாளியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அப்பெண் பாதுகாப்புக்காக ஆணுறை பயன்படுத்தும்படி, முகுந்திடம் கூறியுள்ளார்.

இதற்கு முகுந்த் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முகுந்த், தான் கொடுத்த ரூ.1500 பணத்தை திருப்பித் தரும்படி பாலியல் தொழிலாளியிடம் சண்டையிட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுப்புத் தெரிவித்து சத்தமிடவே, மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து, அப்பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த தங்க நகைகளையும், செல்போனையும் எடுத்துக்கொண்டு முகுந்த் அங்கிருந்து தப்பியுள்ளார்.

பின்னர் அந்தப் பெண்ணின் மகன் பள்ளியை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது, தன் தாய் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் குற்றவாளியைக் கைதுசெய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை: சிறுவனுக்கு ஆயுள்

ABOUT THE AUTHOR

...view details