தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

144 தடை உத்தரவு தொடர்பாக நீடிக்கும் குழப்பம்! - 144 restraining order

புதுச்சேரி: நிவர் புயல் காரணமாக பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Prolonged confusion over 144 restraining order!
144 தடை உத்தரவு தொடர்பில் நீடிக்கும் குழப்பம்!

By

Published : Nov 26, 2020, 7:07 PM IST

வங்கக் கடலில் உருவாகிய நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24ஆம் தேதிமுதல் இன்று அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை (நவ. 26) மாமல்லபுரம்-காரைக்கால் இடையே நிவர் புயல் கரையைக் கடந்தது. இதன் காரணமாக இன்று காலை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 144 தடை உத்தரவை விலக்குவதாக அறிவித்தார்.

இதனிடையே, ஆட்சியர் (பொறுப்பு) பூர்வா கார்க் இன்று மாலை 6 மணி வரை 144 தடை நீடிப்பதாக உத்தரவு பிறப்பித்தார். இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டனர்.

பொறுப்பு ஆட்சியரின் அறிவிப்பைத் தொடர்ந்து, புதுச்சேரி காவல் துறைத் தலைவர் பாலாஜி ஸ்ரீவத்சா, மதியம் 12 மணியுடன் 144 தடை உத்தரவு முடிவுக்கு வருவதால் காவல் துறையினர் அனைவரும் வழக்கம்போல பணிக்குத் திரும்ப வேண்டுமென கூறினார்.

144 தடை உத்தரவு தொடர்பில் நீடிக்கும் குழப்பம்!

144 தடை உத்தரவு தொடர்பில் ஒரேநாளில் மூன்று வெவ்வேறு அறிவிப்புகள் வெளியானதால், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதா, இல்லையா? என்ற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டது.

அரசு அலுவலர்கள்-அமைச்சரவைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனக் கூறப்பட்டுவரும் சூழலில் முதலமைச்சர், ஆட்சியர், காவல் துறைத் தலைவர் ஆகியோரின் மாறுபட்ட அறிவிப்புகள் அதனை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க :'அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளோரை தவிர்த்து அனைவருக்கும் விடுமுறை' - புதுச்சேரி அரசு

ABOUT THE AUTHOR

...view details