கொல்கத்தா: எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (ஓஎம்சி) ஜூலை 3ஆம் தேதி மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றாமல் வைத்திருந்தன. ஜூன் 7 முதல், பெட்ரோல் விலை ரூ.9.17 ஆகவும், டீசல் ரூ.11.14 ஆகவும் அதிகரித்துள்ளது.
மற்ற நகரங்களிலும் விலையேற்ற அளவானது ஒத்திருந்தது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏன் தினமும் உயர்ந்து கொண்டிருந்தது என்ற கேள்வி மக்களுக்கு எழாமல் இல்லை?
2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தை வகுத்தது. அதனை 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தவுடன் செயல்படுத்தியது.
தரவுகளின்படி, 2008 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை மிகவும் உயர்ந்தது. அந்த நேரத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 132 டாலராக இருந்தது. அந்த சமயத்தில் பெட்ரோல் விலை ரூ.50 க்கும் மேல் இல்லை.
தரவுகளின்படி, என்.டி.ஏ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, 2014 ஜூன் மாதம் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 109 டாலராக இருந்தது. அந்த நேரத்தில் கொல்கத்தாவில் டீசல் லிட்டருக்கு ரூ.62 ஆகவும், பெட்ரோல் ரூ. 79 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2008 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை மிகவும் உயர்ந்தது. அந்த நேரத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 132 டாலராக இருந்தது. அந்த சமயத்தில் பெட்ரோல் விலை ரூ.50 க்கும் மேல் இல்லை.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து வல்லுநர்கள் என்ன நினைக்கிறார்கள்?
மேற்கு வங்க பெட்ரோல்-டீசல் சங்க செயலாளர் சுர்ஜித் கோல் கூறுகையில், "இந்த நேரத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 40 டாலராக உள்ளது. பொதுமுடக்கத்தின் போது, ஒரு பீப்பாய்க்கும் கீழாக கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் அப்போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை.
பின்னர் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து பீப்பாய்க்கு 40 டாலரை எட்டியது. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வரும் அளவுக்கு இங்கு பெட்ரோல்- டீசலில் விலை அதிகரிக்கவில்லை. எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருகிறது எனும் மத்திய அரசின் வாதம் சரியானதல்ல.
1. இதுவரை பெட்ரோல் டீசல் ஆகிய இரண்டுமே, மத்திய அரசின் தொலை நோக்கு வரி திட்டமான ஜிஎஸ்டிக்குள் வரவில்லை. காரணம் பெட்ரோல் டீசலில் இருந்து வரும் கணிசமான வருவாய்.