தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டேவை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் - chief justice of india

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

President Ram Nath Kovind appoints Justice Sharad Arvind Bobde as next Chief Justice, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே நவ..18 யில் பதவியேற்பு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

By

Published : Oct 29, 2019, 1:07 PM IST

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே என்கிற ஷரத் அரவிந்த் பாப்டேவை நியமிக்கும்படி குடியரசுத் தலைவரிடம் ரஞ்சன் கோகாய் பரிந்துரைத்திருந்தார்.

இந்நிலையில், ரஞ்சன் கோகாயின் பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான எஸ்.ஏ. பாப்டே (63) வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

இதையும் படிங்க: நீதிமன்றத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுவாரா எஸ்.ஏ. பாப்டே?

ABOUT THE AUTHOR

...view details