டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி ஆறு பேரால் பாலியல் வன்புணர்வுசெய்யப்பட்டு, பேருந்திலிருந்து தூக்கிவீசப்பட்டார்.
இந்த வழக்கில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவர் குற்றம் நடந்தபோது இளஞ்சிறார் என்பதால், அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
ஓட்டுநர் ராமன் சிங் என்பவர் திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மீதமுள்ள நால்வருக்கும் உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தண்டனையை தள்ளிப்போடும் நோக்கில் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு, கடைசி நிவாரண மனு, குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவருகின்றனர்.