புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில் பெட்ரோல் பங்குகள், காய்கறிகள் விற்பனையகம், உழவர் விதைப் பொருட்கள் விற்பனையகம் உள்ளிட்ட நிறுவனங்களில், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 32 மாதங்களாக, இவர்களுக்குச் சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறியும்; இதற்கிடையே நிலுவை மாத சம்பளத்திற்காக கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனக்கூறியும் ஆளுநர் மாளிகை அருகே பாப்ஸ்கோ ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.