தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்... காணொலி வைரல்...!

புதுச்சேரி: வீட்டில் ஆசையாக வளர்த்த பூனைக்கு, வீட்டின் உரிமையாளர் வளைகாப்பு விழா நடத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

By

Published : Sep 16, 2020, 7:55 PM IST

மியாவ் குட்டிக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்கள்...காணொலி வைரல்...!
மியாவ் குட்டிக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்கள்...காணொலி வைரல்...!

புதுச்சேரி, மூலக்குளத்தைச் சேர்ந்த வசந்தா என்பவர் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த பூனை தற்போது கற்பமாகியுள்ளது. இதையறிந்த வீட்டின் உரிமையாளர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து, தான் ஆசையாக வளர்த்த செல்லப்பிராணி பூனைக்கு வளைகாப்பு நடத்தினார்.

அதில், பூனைக்கு பூமாலை அணிவித்து ஒரு பெண்ணுக்கு நலங்கு சுற்றுவதுபோல் நலங்கு வைத்து வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடத்தியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீட்டில் இருந்த சிறுமிகளும், பூனைக்கு நலங்கு வைத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மியாவ் குட்டிக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்கள்...காணொலி வைரல்...!

அதுமட்டுமின்றி அந்த வளைகாப்பு நிகழ்வில் ஏழு வகையான தட்டுகளில் நலங்கு பொருள்கள், பூனைக்கு பிடித்த உணவுகளையும் வைத்துள்ளனர். வளைகாப்பு நடத்தப்பட்ட பூனை, தற்போது அழகான நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது.

இதையும் படிங்க...3.31 நிமிடங்களில் 2,222 அம்புகள் - 5 வயது சிறுவன் சாதனை!

ABOUT THE AUTHOR

...view details