டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் காற்றின் மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டுமான தொழில்களை மேற்கொள்ளவும், விவசாயக் கழிவுகளை எரிக்கவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
இந்நிலையில், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளுடன் சேர்ந்து பிரதமர் அலுவலகம் மாசு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. கடந்த 24 மணி நேரத்தில் மாசுவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாநில அரசுகள் சார்பாக பங்கேற்ற உயர் அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.