சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் வகையில் ’ஸ்வநிதி திட்டம்’ அமல்படுத்தப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் இதன் மூலம் பயனடைந்தவர்களிடையே உரையாற்றிய மோடி, இத்திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகள் தன்னிறைவு பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசியவர் அவர், "ஸ்வநிதி திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களிடையே பேசும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தெரியவந்தது. முன்பெல்லாம், வங்கியில் கடன் பெறுவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் தற்போது அவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கிறது.