தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார் - PM Modi

டெல்லி: கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.

pm-modi-will-address-mann-ki-baat-today
pm-modi-will-address-mann-ki-baat-today

By

Published : Apr 26, 2020, 9:47 AM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், சில மாநிலங்களில் ஊரடங்கு காலத்தை மேலும் நீட்டிக்க திட்டமிட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு 'மான் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மாதத்திற்கான 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பல கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளேன். ஏப்ரல் 26 காலை 11 மணிக்கு மான் கி பாத் நிகழ்ச்சிக்காக டியூன் செய்யுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: மோடியின் உரையை கேட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள்

ABOUT THE AUTHOR

...view details