தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அமைதிக்கான சிலை'யை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி - சமணத் துறவி ஸ்ரீ விஜய் வல்லப் சூரிஸ்வர்

சமணத் துறவி ஸ்ரீ விஜய் வல்லப் சூரிஸ்வர் ஜி மகாராஜின் 151ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலையை பிரதமர் மோடி இன்று (நவம்பர் 16) திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Nov 16, 2020, 12:00 PM IST

Updated : Nov 16, 2020, 2:08 PM IST

சமணத் துறவி ஸ்ரீ விஜய் வல்லப் சூரிஸ்வர் ஜி மகாராஜின் 151ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் பாலி நகரில் நிறுவப்பட்டுள்ள அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி இன்று மதியம் திறந்து வைக்கவுள்ளார்.

12 அடி உயரம் கொண்ட இந்த சிலை 8 வகையான உலோகங்களால் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இதில் பெருமளவு செம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, " இன்று மதியம் அமைதிக்கானச் சிலையை திறந்து வைக்கிறேன். அனைவரும் நிகழ்ச்சியை காண வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவு அளித்த துறவி விஜய் வல்லப், கல்வியைப் பரப்புவதிலும், மக்களின் நலனுக்காகப் போராடியதிலும் பெரும் பங்காற்றியவர் ஆவார்.

இதையும் படிங்க:

அமித்ஷாவை சந்திக்கும் புதுச்சேரி முதலமைச்சர்

Last Updated : Nov 16, 2020, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details