தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்த பிரதமர்! - 2020 பால் புரஸ்கார் விருது

2020ஆம் ஆண்டுக்கான பால் புரஸ்கார் விருதுபெற்ற குழந்தைளுடன்தான் இருந்த புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

pm modi shares pictures with recipients of rashtriya bal puraskar
pm modi shares pictures with recipients of rashtriya bal puraskar

By

Published : Jan 25, 2020, 9:04 AM IST

கலை, கல்வி, புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்துவிளங்கும் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’ விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்த விருது வழங்குவது 1996ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகளை ராஷ்டிரிய பவனில் வைத்து குடியரசுத் தலைவர் 49 குழந்தைகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி வழங்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி, விருதுபெற்ற குழந்தைகள் மத்தியில் உரையாடினார். அந்த உரையில் சாதித்த குழந்தைகளைப் பாராட்டி பிரதமர் பேசினார்.

இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் 49 குழந்தைகளுடன் தான் இருந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவுகளில் ஒவ்வொரு குழந்தையும் சாதித்த விஷயங்களையும் அவர்களுக்கு பாராட்டும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்

ABOUT THE AUTHOR

...view details