சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரேவின் 94ஆவது பிறந்தநாள், அவரது தொண்டர்களால் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதையடுத்து, பல தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பால் தாக்கரேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தைரியமானவர். அவர் யாராலும் வீழ்த்த முடியாத தலைவர். பொதுமக்களின் பிரச்னை குறித்து கேள்வி எழுப்ப அவர் எப்போதும் தயங்கியது இல்லை. இந்திய கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மீது எப்போதும் பெருமை கொள்வார். பலரை தொடர்ந்து ஈர்த்தும் வருகிறார்" எனப் பதிவிட்டுள்ளார்.