தமிழ்நாடு

tamil nadu

'வீழ்த்த முடியாத தலைவராக விளங்கியவர் பால் தாக்கரே' - பிரதமர் மோடி

By

Published : Jan 23, 2020, 2:37 PM IST

மும்பை: பால் தாக்கரே வீழ்த்த முடியாத தலைவர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Bal Thackeray
Bal Thackeray

சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரேவின் 94ஆவது பிறந்தநாள், அவரது தொண்டர்களால் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதையடுத்து, பல தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பால் தாக்கரேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தைரியமானவர். அவர் யாராலும் வீழ்த்த முடியாத தலைவர். பொதுமக்களின் பிரச்னை குறித்து கேள்வி எழுப்ப அவர் எப்போதும் தயங்கியது இல்லை. இந்திய கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மீது எப்போதும் பெருமை கொள்வார். பலரை தொடர்ந்து ஈர்த்தும் வருகிறார்" எனப் பதிவிட்டுள்ளார்.

1926ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி புனேவில் பிறந்த பால் தாக்கரே, மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீட்டுக்கட்டாய் சரிந்த நீர்த்தேக்கத் தொட்டி - வைரல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details