தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 11, 2020, 4:52 PM IST

ETV Bharat / bharat

'ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளார்' - அரவிந்த் கெஜ்ரிவால்

ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Kejriwal
Kejriwal

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில், கலந்துகொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளார். ஊரடங்கை முன்னதாகவே அறிவித்ததால் பல வளர்ந்த நாடுகளின் நிலைமையை விட இந்தியா நல்ல நிலைமையில் உள்ளது.

இப்போது இது தளர்த்தப்பட்டால், நாம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் வீணாகிவிடும். எனவே, ஊரடங்கை நீட்டிப்பது சரியான முடிவு" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஊரடங்கை நீட்டிக்க கெஜ்ரிவால் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details