கோவிட்-19 பெருந்தொற்று உலகையே சூறையாடி வரும் வேளையில், நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுடேர்தே உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி மூலம் உரையாடினார். அப்போது, கோவிட்-19ஐ தடுக்க இரு நாடுகளும் எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
பெருந்தொற்றை எதிர்கொள்ள பிலிப்பைன்சுக்கு இந்தியா மருந்து அனுப்பிவருவதை அதிபர் ரொட்ரிகோ பாராட்டினார். இதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, பிலிப்பைன்சுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை இந்தியா தொடர்ந்து விநியோகிக்கும் என உறுதியளித்தார்.