கரோனா வைரசை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அரசின் நிவாரண நிதிக்கு பணமளித்து வருகின்றனர். அதில், 99 வயதாகும் குஜராத் மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏ ரத்னபாய் தம்மர் தனது சேமிப்பு பணம் ரூ. 51 ஆயிரத்தை வழங்கினார். இந்த சம்பவம் நாட்டு மக்கள் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ரத்னபாய் தம்மரை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது ரத்னபாய் தம்மரின் உடல்நிலையை பற்றி மோடி விசாரித்ததாகவும், இந்த சூழலிலும் நாட்டு மக்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் பாராட்டியுள்ளார்.