தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிளாஸ்டிக் இல்லா மாநகராகும் காசியாபாத்!

மாநகராட்சி நிர்வாகத்தின் தொடர் பரப்புரைகளின் விளைவாக தற்போது வணிகர்கள் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை காசியாபாத் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துவருகின்றனர்.

By

Published : Dec 24, 2019, 12:19 PM IST

Plastic awareness in Ghaziabad
Plastic awareness in Ghaziabad

தேசிய தலைநகர் பகுதியின் இதயமாக கருதப்படும் காசியாபாத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் வரும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே வேகமாக அதிகரித்துவருகிறது. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களால் வரும் ஆபத்துகள் குறித்து காசியாபாத் மாநகராட்சி, மக்களிடையே செய்துவரும் தொடர் பரப்புரைகளின் விளைவாகவே இது பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்திலேயே முதன்முறையாக காசியாபாத்தில், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு மூன்று சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காசியாபாத் மாநகராட்சியின் தொடர் பரப்புரைகளின் விளைவாக தற்போது வணிகர்கள் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துவருகின்றனர். இதனால் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாவட்ட நிர்வாகத்தால் சேமிக்கப்பட்டுள்ளது

பிளாஸ்டிக் இல்ல மாநகராகும் காசியாபாத்!

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு மூன்று சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பிரமாண்ட பேரணியையும் மாநகராட்சி நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இதேபோல் மாநகராட்சியால் ஒரு பாத்திர வங்கியும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வைக்கப்பட்டிருக்கும் ஸ்டீல் பாத்திரங்களை விழாக் காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: எரிபொருள்களாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள்!

ABOUT THE AUTHOR

...view details