புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ பொழிலன் தலைமையில் சுதேசி மில் அருகில் கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியினர், “மத்திய அரசு கரோனா நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. தற்போது கச்சா எண்ணெய் குறைந்துள்ள நேரத்தில், மத்திய அரசு, ஏழை, எளிய மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.