தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 17, 2020, 1:03 PM IST

ETV Bharat / bharat

உணவுப் பொருள்கள் போதிய அளவு இருப்பில் உள்ளன - மத்திய அமைச்சர்

டெல்லி: உணவுப் பொருள்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Minister
Minister

கரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்கும்விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்குத் தடையின்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக மோடி தெரிவித்தார்.

இருப்பினும், உணவுப் பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இதற்கு விளக்கம் அளித்துள்ள கிரிராஜ் சிங், "உணவுப் பொருள்களைப் பொறுத்தவரை போதிய அளவு இருப்பு உள்ளது. ஊரடங்கு விதிக்கப்பட்டபோதிலும், ஏழை மக்களுக்கு உணவு வழங்க பிரதமர், முதலமைச்சர்கள் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றன.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

உணவுப் பொருள்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவிவரும் நிலையில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார். இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 1,007 பேர் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்தது.

இதையும் படிங்க: அறிவுரை தேவையில்லை: ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி

ABOUT THE AUTHOR

...view details