தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜனசேனா கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ஓய்வூதியம்- பவண் கல்யாண் தகவல்

ராஜ்முந்திரி: ஜனசேனா கட்சி ஆட்சிக்கு வந்தால் 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ரூ.6ஆயிரம் பென்சன் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான பவண் கல்யாண் தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 15, 2019, 2:48 PM IST

pawn kalyan

ஆந்திர மாநிலம், ராஜ்முந்திரியில் ஜனசேனா கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்க நாள் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான பவண் கல்யாண் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக எங்கள் கட்சி அனைத்து விதத்திலும் தயாராகி வருகிறது.

நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஜனசேனா கட்சி வெற்

ஜனசேனா கொடி
றிப் பெற்றால் 60வயதை கடந்த விவசாயிகளுக்கு ரூ.6ஆயிரம் பென்சன் வழங்கப்படும். இதையடுத்து கே.ஜி மற்றும் பிஜி வரை மாணவர்களுக்கு இலவச கல்வி, 10 லடசம் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

மேலும் 4 மக்களவை மற்றும் 32 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details