தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சட்ட அமைச்சகத்தில் பணிபுரிபவருக்கு கரோனா - கரோனா செய்திகள்

சாஸ்த்ரி பவனில் உள்ள சட்ட அமைச்சகத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர்கள் பணிபுரிந்து வந்த தளத்தின் ஒரு பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Shastri Bhavan
Shastri Bhavan

By

Published : May 5, 2020, 2:30 PM IST

சாஸ்த்ரி பவனின் நான்காவது தளத்தில் இயங்கும் சட்ட அமைச்சத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கு பணிபுரியும் மூத்த அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் அமைந்துள்ள தளத்தின் ஒரு பகுதி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகமான நிதி ஆயோக் கட்டடம் சென்ற மாதம் சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது சாஸ்திரி பவனின் ஒரு பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் கட்டடத்திற்கு முன்னதாக, விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அலுவலகத்தை உள்ளடக்கிய ராஜீவ் காந்தி பவனில், ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி பவனுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், டெல்லியிலுள்ள சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகம், பிஎஸ்எஃப்இன் ஒரு பகுதி உள்ளிட்டவையும் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க:ஆப்பிரிக்க காய்ச்சல்: உயிரிழந்த 2500 பன்றிகள்...!

ABOUT THE AUTHOR

...view details