தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 27, 2020, 10:00 PM IST

ETV Bharat / bharat

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான்... பதில்‌ தாக்குதலுக்கு தயாராகும் இந்தியா!

காஷ்மீர்: பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைதாண்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எல்லை
ல்லை

காஷ்மீரில் பூஞ்ச் ​​மாவட்டத்தில் இன்று (ஜூலை27) காலை 10.30 மணியளவில் எல்லையை தாண்டி பாகிஸ்தான் சிறிய ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு, மோட்டார் தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டது.

இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதே போல், கடந்த ஜூலை 23ஆம் தேதி, பூஞ்ச், குப்வாரா மாவட்டங்களில் எல்லையை தாண்டி துப்பாக்கிச் சூடு, ஷெல் தாக்குதல்களை பாகிஸ்தான் மேற்கொண்டதில் பொதுமக்கள் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்தாண்டில் மட்டும் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் 21 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 94 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் ஊதியக் குறைப்பில் ஈடுபட்ட இண்டிகோ!

ABOUT THE AUTHOR

...view details