ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இன்று அதிகாலையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக ஷெல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்ததாகப் பாதுகாப்புச் செய்தித்தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.