தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2020, 9:50 AM IST

ETV Bharat / bharat

பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு இந்தியத் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

pakistan
pakistan

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இன்று அதிகாலையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக ஷெல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்ததாகப் பாதுகாப்புச் செய்தித்தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:இந்தியாவை உளவு பார்க்கவந்த பாகிஸ்தான் ’புறா’

ABOUT THE AUTHOR

...view details