கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தக்கில் இந்திய- சீன ராணுவப் படையினருக்கு இடையே மோதல் நடைபெற்றது. இச்சம்பவத்தை ஊடுருவதற்கு எளிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நுழைந்து தாக்குதலை நடத்தக்கூடும் என்று ஜம்மு-காஷ்மீரின் காவல் துறை தலைமை இயக்குநர் தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.
'இந்திய- சீன மோதலைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடும்' - காஷ்மீர் டிஜிபி எச்சரிக்கை! - ஹிஸ்புல் முஜாகிதீன்
ஸ்ரீநகர்: இந்திய-சீன எல்லை மோதலைப் பயன்படுத்தி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடும் என்று காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Dilbag Singh
காஷ்மீர் எல்லையில் ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், லக்ஸர்-இ-தைபா உள்ளிட்ட பயங்கரவாதிகளின் அமைப்பைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ஊடுருவத் தயாராக இருப்பதாக தகவல்கள் கிடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் எல்லையில் மேலும் பாதுகாப்பை பலப்படுத்த துணைப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐநா பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் போட்டியின்றி இந்தியா தேர்வு; அமெரிக்கா வாழ்த்து