தமிழ்நாடு

tamil nadu

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

By

Published : May 20, 2020, 10:02 AM IST

ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் மாவட்ட பாலகோட் செக்டாரில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்தியா தக்க பதிலடி வழங்கியுள்ளது.

Pak violates
Pak violates

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டியுள்ள பாலகோட் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

நேற்று இரவு 10 மணி அளவில் இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாள்களாக பாகிஸ்தான் ராணுவம் இப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்திவருகிறது.

முன்னதாக, கடந்த திங்களன்று ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட குல்பூர் செக்டாரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இதையும் படிங்க:தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படையினர் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details