தமிழ்நாடு

tamil nadu

அத்துமீறிய பாகிஸ்தான்: பதிலடி தந்த இந்தியா!

By

Published : Oct 10, 2020, 12:43 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்தது.

Pak army shells
Pak army shells

இந்தியா சீனா இடையே தொடர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் சார்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கிர்னி, காஸ்பா ஆகிய பகுதிகளில் நேற்று (அக்.9) மாலை ஐந்தரை மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்திய ராணுவம் சார்பில் அவர்களுக்குத் தக்க பதிலடி அளிக்கப்பட்டது.

இதேபோல் அக்டோபர் ஒன்றாம் தேதி, பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, ரஜோரி மாவட்டத்தில் சுந்தர்பன் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

இதையும் படிங்க:சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதியினர் மீது தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details